தனுஷ்கோடி 3-வது மணல்திட்டு பகுதியில் மர்மமான முறையில் பிளாஸ்டிக் படகு நிறுத்திவைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடியில் இருந்து, இலங்கை தலைமன்னாருக்கும் இடையே நடுக்கடலில் 13 மணல் திட்டுகள் உள்ளது. இதில் 5-வது மணல் திட்டுடன் இந்திய கடல் எல்லைப் பகுதி முடிவடைந்து விடுகிறது. இந்நிலையில் தனுஷ்கோடி அருகே உள்ள 3-வது மணல்திட்டு பகுதியில் மர்மமான முறையில் படகு ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் சுங்கத்துறை துறையினருக்கு […]
