மர்மமான முறையில் இளம்பெண் குழந்தையுடன் இறந்து கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள விஜயகரிசல்குளம் கிராமத்தில் முத்து(28) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு காயத்ரி(27) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 4 மாத ஆண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக முத்துவுக்கும் காயத்ரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று வீட்டு மாடியில் மர்மமான முறையில் காயத்ரியும், குழந்தையும் இறந்து […]
