தமிழகத்தில் தொடர் மழை பெய்து வருவதால் டெங்கு, சிக்குன் குனியா காய்ச்சலுக்கான மருந்து, மாத்திரைகள் இருப்பு உறுதி செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்த நிலையில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. டெங்கு காய்ச்சல் தலை துாக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு மாவட்டங்களிலும் சளி, காய்ச்சல், இருமலுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை இருப்பில் வைக்கவும், தேவைக்கேற்ற அளவில் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், […]
