மருத்துவரின் பரிந்துரை சீட்டு இன்றி வலி நிவாரணி உள்ளிட்ட மருந்துகளை விற்பனை செய்ய மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்க இருக்கிறது. மருந்தகங்களில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இன்றி எந்த மருந்தையும் விற்பனை செய்ய கூடாது என்ற விதி நடைமுறையில் இருக்கிறது. இந்நிலையில் மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனை வாரியமான DTAB, குறிப்பிட்ட சில மருந்துகளை , மருத்துவரின் பரிந்துரை சீட்டு இன்றி விற்பனை செய்ய அனுமதிக்கலாம் என்ற கொள்கைக்கு அனுமதி அளித்துள்ளது. இதற்கான அறிவிப்பை சுகாதாரத் துறை […]
