ஊரடங்கை நீட்டிக்குமாறு மருத்துவக் குழு பரிந்துரைக்கவில்லை என மருத்துவர் பிரதீப் கவுர் கூறியுள்ளார். கொரோனவை கட்டுப்படுத்த ஊரடங்கு மட்டுமே தீர்வு அல்ல என தெரிவித்துள்ளனர். இன்று காலை மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். தளர்வுகளுடன் கூடிய 5ம் கட்ட ஊரடங்கு நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் சுமார் 2 மணி நேரமாக நடைபெற்ற இந்த ஆலோசனை நிறைவு பெற்றது. இதையடுத்து செய்தியாளர்களை […]
