புதுச்சேரி சட்டப்பேரவையில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் மருத்துவர்கள் தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. அதில் கலந்து கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி சிறப்பாக மருத்துவ பணியாற்றிய 25 மருத்துவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மாநிலத்தில் அனைவருக்கும் சிறப்பான மருத்துவம் கிடைக்க வேண்டும் என்பதுதான் அரசின் முக்கிய எண்ணம். புதுச்சேரியில் செயல்படுத்தப்பட்டு வருகின்ற மருத்துவ காப்பீடு திட்டம் சிவப்பு அட்டைகளுக்கு மட்டுமே தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் மக்களின் கோரிக்கையை ஏற்று மஞ்சள் […]
