இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடேந்திரபுரத்தில் போபிநாத் என்பவர் வசித்து வந்துள்ளார். பிசியோதெரபி மருத்துவரான இவர் கோவையில் ஒரு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கோபிநாத் வேலையை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து பெரியகுளம்-வத்தலகுண்டு சாலையில் சென்றுகொண்டிருந்தபோது தேனியில் இருந்து திண்டுக்கலை நோக்கி சென்று கொண்டிருந்த லாரி எதிர்பாராத விதமாக கோபியின் […]
