கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சரியாக சிகிச்சை அளிக்காததால் இரண்டு தினங்களில் உயிர் இழந்துவிடுவேன் என ஆடியோவை வெளியிட்ட ராஜபாளையத்தைச் சேர்ந்த மருத்துவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மருத்துவமனை நடத்தி வந்த மருத்துவர் சாந்திலால் கடந்த பத்தாம் தேதி மூச்சுத்திணறல் பாதிக்கப்பட்டார். பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானதால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டர். அங்கு தனக்கு சரியாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் தொடர்ந்து […]
