புனேவைச் சேர்ந்த மருத்துவர் கணேஷ், மகப்பேறு மற்றும் பல்நோக்கு மருத்துவமனையை நடத்தி வருகிறார். பிரசவத்தின் போது பெண் குழந்தை பிறந்தால் கட்டணம் வசூலிக்காமல் சேவை செய்து வருகிறார் இவர். இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த 10 வருடங்களில் ஆறு கோடி பெண் சிசுக்கொலைகள் நம்முடைய நாட்டில் அரங்கேறி உள்ளது. இதுபோன்ற கொடுமைகள் குறிப்பிட்ட நாடு, மாநிலம், நகரம் சார்ந்தது அல்ல. உலகம் முழுவதுமாக இந்த கொடுமை அரங்கேறி கொண்டுதான் இருக்கிறது. எங்கள் மருத்துவமனையில் பெண் குழந்தைகள் பிறக்கும்போது […]
