காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத்திணறல் ஏற்பட்டால் உடனே மருத்துவமனைக்கு வரவேண்டும் என மருத்துவர்கள் நிபுணர் குழு அறிவுறுத்தியுள்ளது. மணம், சுவையை உணரவில்லை என்றாலும் உடனே சிகிச்சைக்கு வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். முதல்வருடன் ஆலோசனை நடத்திய பின்பு செய்தியாளர்களை மருத்துவக் குழுவினர் சந்தித்தனர். அப்போது, ஊரடங்கு நீட்டிப்பு குறித்து ஆலோசனையில் பரிந்துரைக்கவில்லை என தெரிவித்துள்ளனர். மேலும், கொரோனா தொற்றை கண்டு மக்கள் அச்சமடைய தேவையில்லை எனக் கூறியுள்ளனர். அறிகுறி தெரிந்த உடனே பரிசோதனை செய்து கொள்ள […]
