கர்ப்பிணி ஒருவருக்கு பிரசவ அறுவை சிகிச்சையின் போது வயிற்றில் துணி வைத்து தைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் விஜயப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷாஹின் உத்னால்(28). கர்ப்பிணியான இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டு பிரசவத்திற்காக விஜயப்புரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. சிகிச்சைக்கு பிறகு தாயும் சேயும் நலமாக இருப்பதாக கூறி மருத்துவர்கள் அவர்களை டிஸ்சார்ஜ் செய்துள்ளனர். […]
