மத்திய அமைச்சர் நிதின் கட்கரி புனேவில் உள்ள சிங்ஹாகாத் பகுதியில் மருத்துவமனை ஒன்றை திறந்து வைத்திருக்கிறார். அப்போது அவர் மகாராஷ்டிராவில் மந்திரியாக இருந்தபோது நடைபெற்ற ஒரு நிகழ்வை நினைவுக்கூர்ந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது, நான் மகாராஷ்டிராவில் மந்திரியாக இருந்தபோது மறைந்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் கேபி ஹெட்கேவார் பெயரில் அவுரங்காபாத்தில் மருத்துவமனை ஒன்று கட்டப்பட்டிருந்தது. அதை திறப்பதற்கு ஆர்.எஸ்.எஸ் சார்பில் தொழிலதிபர் ரத்தன் டாடாவிற்கு அழைப்பு விடுத்திருந்தோம். இந்நிலையில் அந்த நிகழ்ச்சிக்கு வந்த டாடா இந்த மருத்துவமனையில் இந்துக்களுக்கு […]
