கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிசிசிஐ தலைவர் கங்குலி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐ ,தலைவருமான கங்குலி கடந்த 28-ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனால் அவர் கொல்கத்தாவிலுள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் .அதோடு லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில் […]
