பெரம்பலூரில் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் பணியில் இருக்கும்போது திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் மருத்துவர் தர்மலிங்கம் என்பவர் வசித்து வந்தார். இவர் மருத்துவ கண்காணிப்பாளராக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். இவர் அந்த மருத்துவமனையில் நேற்று மதியம் வார்டுகளுக்கு சென்று நோயாளிகளை பார்த்தார். அதன் பின்பு தனது அறைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு சக மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். […]
