மருத்துவமனை ஊழியர், கர்ப்பிணிப் பெண்ணுக்கு எயிட்ஸ் இருப்பதாக பொய் கூறியது உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள சோமபுரா பகுதியை சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நெஞ்சுவலி ஏற்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அவர் அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில், அன்றைய நாள் இரவே அந்த பெண்ணுக்கு பிரசவம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் அங்கு உள்ள மருத்துவமனை ஊழியர் ஒருவர் ரூ.2000 லஞ்சமாக கேட்டுள்ளார். உடனே அப்பெண் அதனை கொடுக்க […]
