கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் அமர்ந்தபடியே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் ஜகல்பூரி நகரத்தில் வசிக்கும் 57 வயதான நபர் பிஸ்வபங்கலா கிரிரங்கனில் உள்ள ஒரு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்ட இவருக்கு ஆக்சிஜன் உதவி கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்ட பிறகு நோயாளியின் உறவினர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர்.இதனையடுத்து புதன்கிழமை காலை நோயாளியை பார்க்க அவரது உறவினர் மருத்துவமனைக்கு […]
