தமிழக சட்டமன்றம் வெட்டிமன்றமாகவும் புராணங்களை பாடும் மன்றமாகவும் செயல்படுவதாக முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் நடிகருமான கருணாஸ் குற்றம் சாட்டியுள்ளார். சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் நடைபெற்றுவரும் மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் 220ஆவது குருபூஜை விழாவிற்கு வருகை தந்த முக்குலதோர் புலிபடை தலைவர் கருணாஸ் மருது பாண்டியர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரைச் சூட்ட வேண்டும் எனவும், பாராளுமன்ற வளாகத்திலேயே பிரதமர் மோடி தலைமையில் […]
