மரம் விழுந்து பெண் பணியாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பெரியகரம் கிராமத்தில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் ஏரி கால்வாய்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏரிக்கரை அருகில் உள்ள விவசாய நிலத்தில் உள்ள ஒரு தென்னை மரம் திடீரென கால்வாயில் விழுந்தது. அப்போது ஏரி கால்வாயில் வேலை செய்து கொண்டிருந்த பூங்கொல்லைமேடு கிராமத்தில் வசிக்கும் சங்கர் என்பவரின் மனைவி சுதா, பார்த்திபன் என்பவரின் மனைவி மஞ்சுளா ஆகியோர் மீது தென்னைமரம் […]
