கோவையில் இருந்து புறப்பட்ட அரசு பேருந்து ஒன்று சரியாக பராமரிப்பு இல்லாத காரணத்தால் பிரேக் பிடிக்காமல் சென்று விபத்து ஏற்பட்டது. கோவை பேருந்து நிலையத்தில் இருந்து ஆனைகட்டி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து இந்திராநகர் பாலம் அருகே மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. கோவையிலிருந்து மதிய நேரத்தில் அரசு பேருந்து ஒன்று ஆனைகட்டிக்கு சென்று கொண்டிருந்தது. பேருந்து தண்ணீர் பந்தலில் இருந்து சின்னதடகம் சென்று கொண்டிருந்தபோது இந்திராநகர் பகுதியில் ஓட்டுனர் பிரேக்கை அழுத்திய போது பிரேக் பிடிக்கவில்லை. […]
