ராமநாதபுரத்தில் ஆடுகளுக்கு இலைகளை பறிக்க மரத்தின் மீது ஏறியவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மாடக்கொட்டான் ஊராட்சி பகுதியில் உள்ள ரமலான் நகரில் ஜகாங்கீர்அலி(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு தேவையான இலைகளை பறிப்பதற்காக அருகில் இருந்த வேப்ப மரத்தில்எறியுள்ளார். இதனையடுத்து அவர் ஆடுகளுக்குத் தேவையான மரக்கிளைகளை படித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக அருகிலிருந்த மின்கம்பி அவர் மீது உரசி மின்சாரம் பாய்ந்துள்ளது. […]
