பீகார் மாநிலத்தில் உயிருடன் இருப்பவருக்கு மருத்துவமனை மரணச் சான்றிதழ் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 3ஆம் தேதி சுன்னு குமார் என்ற 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் அனுமதிக்கப்பட்டார். அவர் கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று உயிரிழந்ததாக அவர்களின் உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு தகனம் செய்ய அவரது உடலை எடுத்துச் சென்ற உறவினர்கள் இறுதியாக அவரை பார்த்தனர். அதில் வேறு ஒருவரின் முகம் தெரிந்ததைக் கண்டு பெரும் […]
