சேலத்தில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் மரங்கள் சாலையில் விழுந்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சேலத்தின் நேற்று மதியம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் மாலை 5 மணி அளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டுள்ளது. அதன் பின்னர் இரவு 7.30 மணிக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த மழை காரணமாக அஸ்தம்பட்டி, பெரமனூர் உட்பட பல்வேறு இடங்களில் மூன்று மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். மேலும் எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி […]
