சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் மரங்களும் சமூகத்தின் ஒரு அங்கம் என்ற எண்ணத்தை மாணவர்களின் மனதில் பள்ளி பருவத்தில் இருந்தே விதைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு நமது உரிமை பாதுகாப்பு இயக்கம், காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் நீர்வளம், நிலவளம் காக்க கண்மாய் கரையோரங்களில் 10,000 பனை விதைகளை விதைத்தனர். அதன்பின்னர் ஆக்ஸிஜனை அதிகளவு தரக்கூடிய அரச மரக்கன்றுகளை காற்று வளம் காக்கும் முயற்சியாக பள்ளி […]
