பெரம்பலூரில் மரகதவல்லித்தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பெரம்பலூரில் சிறப்பு வாய்ந்த மரகதவல்லித்தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கொரோனா தொற்று காரணமாக பங்குனி உத்திர திருவிழாவிற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் மாவட்ட நிர்வாகம் பக்தர்களின் வேண்டுகோளை கருத்தில் கொண்டு அந்த கோவிலில் திருவிழாவை நடத்த அனுமதி வழங்கியுள்ளது. இதனால் இரண்டு நாட்கள் தாமதமாக பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த கொடியேற்றத்தை […]
