சின்னங்குடி மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது மிதந்துவந்த சாக்குப் பையில் 32 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்ததையடுத்து, அதனை தரங்கம்பாடி கடற்கரையோர காவல் படையினரிடம் ஒப்படைத்தனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா சின்னங்குடி மீனவ கிராமத்தைச் சேர்ந்த 35 வயது ஜெயகாந்த், தன்னுடைய பைபர் படகில் சக மீனவர்களுடன் மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றுள்ளனர்.. 28 நாட்டிகல் மைல் தொலைவில் காரைக்கால் அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, கடலில் வெள்ளைநிறத்தில் பெரிய சாக்குப்பை ஓன்று மிதந்து வந்ததாக சொல்லப்படுகிறது. […]
