விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகில் ஆலந்தூரில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவ, மாணவிகள் அனைவரும் பள்ளி சத்துணவு சாப்பிடுவது வழக்கம். இந்நிலையில் இன்று வழக்கம் போல் உணவு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. அதன் பிறகு உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் 24 மாணவர்களுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் 24 பேரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு […]
