கோவிலுக்கு சென்றுவிட்டு வந்த மம்தா பானர்ஜியை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் கட்சியின் தலைவருமனவர் மம்தா பானர்ஜி. இவர் நந்திகிராமம் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று மம்தா பானர்ஜி பிரசாரத்தை முடித்துவிட்டு அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு வெளியில் வந்து யாருடைய பாதுகாப்பும் இல்லாமல் காரின் அருகே தனியாக நின்று கொண்டிருந்துள்ளார். […]
