சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவின் மறைவு செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவன் அவரைக் காண விட்டை விட்டு வெளியேறியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஜ்கஞ்ச் மாவட்டம் நௌதன்வாவைச் சேர்ந்த சாரநாத் யாதவ்(12) என்ற சிறுவன், முலாயம் சிங் யாதவால் ஈர்க்கப்பட்டவன் ஆவார். இந்நிலையில் அவரின் மறைவு பற்றி செய்தி அறிந்ததும் சிறுவன் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி, இறுதியாக அவரை காணவேண்டும் என்று வீட்டை விட்டு வெளியேறியுள்ளான். இதையடுத்து சிறுவன் கோரக்பூரையும், பிறகு லக்னௌவையும் அடைந்துள்ளான். […]
