புதுச்சேரியில் மனை பிரச்சினை காரணமாக இளம்பெண்ணை உறவினர்கள் தாக்கியுள்ள வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாவட்டத்தில் பாகூர் எனும் கிராமம் அமைந்துள்ளது. அப்பகுதியில் தண்ணீர் தொட்டி வீதியைச் சேர்ந்தவர் ஆதிலட்சுமி (50) இவர் தனது மகன் பிரியதர்ஷன் மற்றும் மகள் பிரியதர்ஷினியு டன் வசித்து வருகிறார். இவரது அண்டை வீட்டு உறவினர்களான செல்வி, சுப்பிரமணியன் தம்பதி வசித்து வருகின்றனர். இந்த இரு குடும்பத்திற்கும் இடையே வீட்டுமனை காரணமாக பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆதிலட்சுமி என் மகன் […]
