மது அருந்துவதை தட்டி கேட்ட மனைவி மீது தீ வைத்த கணவனை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பாரதிநகர் பகுதியில் குருநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 12 வயதில் ஒரு மகள் உள்ளார். மேலும் குருநாதன் அடிக்கடி மது அருந்தி விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் குருநாதன் வழக்கம்போல் மதுஅருந்திவிட்டு வந்ததால் தங்கம் இதனை தட்டி கேட்டுள்ளார். இதனால் கணவன்-மனைவி […]
