நீலகிரியில் குடும்பத்தினரை கொலை செய்து விட்டு தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொலக்கம்பை தூதூர்மட்டம் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் வேலை செய்து வருகின்றனர். இங்கு ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அசோக் பகத் ஓரான்(27) என்பவர் தனது மனைவி சுமதி(24) மற்றும் தனது குழந்தைகள் ரேஷ்மா(4), அபய்(8) ஆகியோருடன் தங்கி அங்குள்ள தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இன்று […]
