மனைவி இறந்ததால் கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்திலுள்ள குடியாத்தம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோதண்டன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் நெசவுத்தொழில் பார்த்து வந்துள்ளார். இவருக்கு பொன்னி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாததால் பொன்னி உயிரிழந்து விட்டார். இந்நிலையில் கோதண்டன் தனது மனைவி இறந்ததால் மன வேதனையில் இருந்துள்ளார். […]
