மனைவியை தாக்கிய முதியவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள சடையம்பாளையம் கிராமத்தில் விவசாயியான முத்துசாமி(70) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராசம்மாள்(65) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் சொத்து பிரச்சனை சம்பந்தமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவன் மனைவி இருவரும் தனியாக வாழ்ந்து வந்துள்ளனர். இதில் ராசம்மாள் தனது மகனின் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துசாமி தனது […]
