பிரதமர் இம்ரான் கானிற்கு நெருக்கமானவர்கள் நாட்டிலிருந்து வெளியேற தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. பாகிஸ்தான் நாட்டில் நிதி நெருக்கடியால் பிரதமர் இம்ரான்கான் அரசாங்கத்திற்கான தங்களின் ஆதரவை கூட்டணி கட்சிகள் விலக்கி விட்டன. இதனைத் தொடர்ந்து, அவரின் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையற்ற தீர்மானத்தை பாராளுமன்றம் ரத்து செய்திருக்கிறது. அதிபர் ஆரிப் ஆல்வி, பிரதமர் இம்ரான் பரிந்துரை படி பாராளுமன்றம் கலைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். மேலும், இம்ரான்கான் இடைக்கால பிரதமராக பதவியில் நீடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டிருக்கிறார். […]
