மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கோட்டகுப்பம் பகுதியில் இருக்கும் கீழ்புத்துபட்டில் இலங்கை தமிழர் முகாம் அமைந்துள்ளது. இந்த முகாமில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் முகாமில் வசிக்கும் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி திடீரென காணாமல் போய்விட்டார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கடந்த 4-ஆம் தேதி விழுப்புரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த […]
