காளி சிலையின் காலடியில் மனித தலை கண்டெடுக்கப்பட்டுள்ளது இதனை போலீசார் நரபலி கொடுக்கப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர். தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் ஐதராபாத்தை நாகார்ஜுன சாகருடன் இணைக்கும் நெடுஞ்சாலைக்கு அருகில் ஒரு காளி கோவில் அமைந்துள்ளது. அங்குள்ள காளி சிலையின் காலடியில் நேற்று ஒரு மனிதனின் துண்டிக்கப்பட்ட தலை வைக்கப்பட்டிருந்தது. இதை பார்த்த கோவில் பூசாரி போலீசாருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து விரைந்து சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர். காளி தேவி சிலையின் […]
