சென்னை உயர்நீதிமன்றத்தில் சீர் தொண்டு நிறுவனத்தின் சார்பாக மாநில மனநல கொள்கையை அமல்படுத்த வேண்டும் எனவும், மேலும் மனநலம் பாதிக்கப்பட்டு சாலைகளில் சுற்றித் திரிபவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக சிறப்பு முகாம்கள் அமைக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவப் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்காக நேற்று வந்தது. அப்போது அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையாவது, “மனநலம் பாதிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் சாலைகளில் சுற்றித் திரிந்த 396 […]
