சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு இன்று காலை அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் நான் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளேன் என்று கூறி போனை கட் செய்துவிட்டார். இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் […]
