ஈரோடு மாவட்டத்தில் காலியாக இருக்கும் 107 கிராம உதவியாளர் காலி பணியிடங்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நேற்று பல்வேறு மையங்களில் எழுத்து தேர்வு நடைபெற்றுள்ளது. அந்தியூரில் இருக்கும் தனியார் பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் 1100 பேர் தேர்வு எழுதியுள்ளனர் . இந்நிலையில் வரதநல்லூரை சேர்ந்த பட்டதாரியான ஹரிணி(24) என்பவருக்கும் வினோத் என்பவருக்கும் உறவினர்கள் முன்னிலையில் நேற்று திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து கிராம உதவியாளர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த ஹரிணி தான் தேர்வு எழுத விரும்புவதாக கணவரிடம் தெரிவித்துள்ளார். […]
