சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியுடன் மத்தியக் குழு ஆலோசனை நடத்தி வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மத்திய பேரிடர் மேலாண்மை வாரிய கூடுதல் செயலாளர் திருப்புகழ் தலைமையிலான 5 பேர் கொண்ட குழு தமிழகம் வந்துள்ளது. சென்னையில் இந்த குழுவினர் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தனிமைப்படுத்துபவர்களுக்காக அமைக்கப்பட்ட படுக்கை வசதிகளை நேற்று பார்வையிட்டனர். படுக்கை வசதிகள், கழிப்பிட வசதி, தண்ணீர் வசதி, அவர்களுக்கு வழங்கும் உணவு தயாரிக்கும் இடம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். […]
