சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் மற்றும் மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே ரமேஷ் ஆகியோர் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளனர். அதில் தமிழகத்தில் மதுபானங்கள் விற்பனை செய்யும் நேரத்தை குறைக்க வேண்டும் எனவும், பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை செய்வதை தடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் வந்தது. அப்போது வழக்கு விசாரித்த நீதிபதிகள் தமிழகத்தில் மதுபான கடைகளில் […]
