பையில் மதுபாட்டில்களை கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்ததோடு மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சிவகிரி பகுதியில் தடையை மீறி மதுபாட்டில்கள் கடத்தி செல்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக நடந்து சென்ற வாலிபர் காவல்துறையினரை பார்த்ததும் சற்று தூரத்திலேயே கையில் ஒரு பையுடன் நீண்ட நேரமாக நின்று கொண்டு அங்கேயும், இங்கேயும் பார்த்துக்கொண்டிருந்தார். இதனை பார்த்த […]
