அதிகளவு மது பாட்டில்களை வாங்கியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராதாபுரம் பகுதியில் ஊரக உள்ளாட்சி தேர்தல் ஓட்டுப்பதிவு நாளை நடக்க இருக்கிறது. இதனையொட்டி டாஸ்மாக் மதுக்கடைகள் இன்றும் நாளையும் மூடப்படுகிறது. இந்நிலையில் மதுக்கடையில் அதிகளவு மது பாட்டில்களை வாங்கி விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையில் மதுக்கடையில் அதிகளவு மது பாட்டில்களை வாங்கிய அய்யப்பன் […]
