மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுகநேரி காவல்துறையினர் காயல்பட்டினம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காயல்பட்டினம் புதிய பேருந்து நிலையம் அருகில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் ஓடக்கரை பகுதியில் வசிக்கும் பூலோகபாண்டி என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் அரசு மதுபாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்து […]
