சட்டவிரோதமாக ரயிலில் கடத்தப்பட்ட மது பாக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்து இதுதொடர்பாக 3 பேரை கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி மதுபான கடைகளும் அடைக்கப்பட்டு இருப்பதால் ரயில்களில் மது பாக்கெட்டுகளை கடத்தி வருவதாக ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரனுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையில், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவல்துறையினர் ரயில் நிலையத்தில் தீவிர ரோந்து […]
