ஆதின மடங்கள் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வராது என மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள தர்மபுரம் ஆதீனம் ஷண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது, பழமையான ஆதின மடங்களில் எங்கள் மடமும் ஒன்று. எங்கள் மடமானது சைவ சித்தார்ந்த மரபைச் சார்ந்தது. அரசிடம் இருந்து எந்தவித நீதியோ, உதவியோ நாங்கள் பெறவில்லை. மடத்தின் சொந்த நிதியை பயன்படுத்தி மட்டுமே எங்கள் மடம் இயங்கி வருகின்றது. […]
