Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“ஆதின மடங்கள் தகவல் அறியும் திட்டத்தின் கீழ் வராது”…. மதுரை ஐகோர்ட் உத்தரவு…!!!!

ஆதின மடங்கள் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வராது என மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள தர்மபுரம் ஆதீனம் ஷண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது, பழமையான ஆதின மடங்களில் எங்கள் மடமும் ஒன்று. எங்கள் மடமானது சைவ சித்தார்ந்த மரபைச் சார்ந்தது. அரசிடம் இருந்து எந்தவித நீதியோ, உதவியோ நாங்கள் பெறவில்லை. மடத்தின் சொந்த நிதியை பயன்படுத்தி மட்டுமே எங்கள் மடம் இயங்கி வருகின்றது. […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றத்தில் முத்துப்பாண்டி(31) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முத்துப்பாண்டி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற முத்துபாண்டியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் முத்துப்பாண்டி தற்கொலை செய்து கொண்டதற்கான […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

எப்படி பணி நீக்கம் செய்யலாம்?…. போராட்டத்தில் ஈடுபட்ட தற்காலிக பணியாளர்கள்…. மதுரையில் பரபரப்பு….!!!!

காமராஜர் பல்கலைக்கழகத்தில் தற்காலிக பணியாளர்கள் பணி  நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம் நடைபெற்றுள்ளது. மதுரை மாவட்டத்தில் காமராஜர் பல்கலைக்கழகம் ஒன்று  அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய தற்காலிக பணியாளர்கள் அனைவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பணி  நீக்கம் செய்யப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் நேற்று சிம்மக்கல் பகுதியில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையிடம்  பணி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து பணியாளர்களும் உடனடியாக மீண்டும் பணியில் அமர்த்தப்பட வேண்டும் என கூறி மனு கொடுத்து போராட்டத்தில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!….. “இளம் பெண்ணை எரித்து கொன்ற கணவர்”….. மாமியார் உள்ளிட்ட 4 பேர் கைது….!!!!!!

பெண்ணை  கத்தியால் குத்தி கொலை செய்து எரித்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள கொட்டாம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள  தென்னந்தோப்பில் கடந்த 29-ஆம் தேதி ஒரு பெண்ணின் பிணம் கழுத்தில் தாலியுடன் பாதி எரிந்த நிலையில் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வேலை தேடும் இளைஞர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. வரும் ஜூலை 8 ஆம் தேதி…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

மதுரையில் வருகின்ற ஜூலை 8 ஆம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட வேலைவாய்ப்பு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வேலைவாய்ப்பு மைய துணை இயக்குனர் சண்முகசுந்தர் வெளியிட்டுள்ள செய்தியில், மதுரை மாவட்டம் கோ. புதூரில் உள்ள வேலைவாய்ப்பு மைய அலுவலகத்தில் ஜூலை 8 ஆம் தேதி காலை 10 மணிக்கு தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 10 ஆம் வகுப்பு முதல் முதுகலை பட்டம் வரை படித்தவர்கள் அனைவரும் இந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பாதுகாப்பு பணிக்காக…. நியமிக்கப்படவுள்ள முன்னாள் ராணுவ வீரர்கள்…. கோவில் நிர்வாகம் அறிவிப்பு….!!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பாதுகாப்பு பணியில் முன்னாள் ராணுவ வீரர்கள் நியமிக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மதுரையில் உலக பிரசித்தி பெற்ற கோவிலான மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அம்மனை தரிசிக்க வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். மேலும் பக்தர்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் வருகை தருகின்றனர். இதனையடுத்து பொதுமக்கள் அதிக அளவில் வருவதால் நாள்தோறும் கோவில் பாதுகாப்பிற்காக 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

விஷ பூச்சி கடித்ததால்…. மாணவனுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விஷ பூச்சி கடித்து 8-ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பூமங்களப்பட்டி பகுதியில் செந்தமிழ் செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமங்கலி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு நிதிஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அதே பள்ளியில் நிதிஷின் சகோதரியான அபியா என்பவர் படித்து வருகிறாள். கடந்த 22-ஆம் தேதி பள்ளி வளாகத்தில் இருந்த தார்ப்பாய் அப்புறப்படுத்தப்பட்டது. […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி…. மதுரை மாணவர்கள் கலந்து கொண்டு சாதனை….!!

தேசிய அளவில் நடத்தப்பட்ட டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில் மதுரை மாணவர்கள் கலந்துகொண்டு சாதனை படைத்தனர். பெங்களூரில் தேசிய அளவிலான டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த 2 நாட்களாக நடந்து வந்துள்ளது. இந்த போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். இதில் பூம்சே, க்யூரூகி ஆகிய 2 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் மதுரையில் வசிக்கும் மாணவர்கள் சிலரும் கலந்து கொண்டு 25 தங்கப்பதக்கம், 12 வெள்ளிப் பதக்கம் மற்றும் 9 வெண்கல […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 1 கோடியே 27 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மோசடி”…. 2 பேர் கைது…!!!!

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 1 கோடியே 27 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவர் முனீஸ்வரன் என்பவரை சந்தித்து பேசும் பொழுது தனது நண்பர்கள் ரஞ்சித் குமார், பாண்டியராஜன் உள்ளிட்டடோர் கலெக்டரின் உதவியாளர்களுக்கு பழக்கமானவர்கள் என்பதால் அலுவலகத்தில் நிறைய காலி பணியிடங்கள் இருப்பதால் பிள்ளைகளுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறியதையடுத்து அதை செய்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“ஜாமினிலிருந்து வெளிவந்தவரை படுகொலை செய்த மூன்று பேர்”… மதுரை கோர்ட்டில் சரண்…!!!!

ஜாமினில் இருந்து வெளி வந்தவரை மூன்று பேர் கொலை செய்ததையடுத்து மதுரை கோர்ட்டில் சரணடைந்தள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் நான்கு கொலை வழக்கு உட்பட பல குற்றவழக்குகள் இருக்கின்ற நிலையில் இவர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு ஜாமீன் கிடைத்ததை தொடர்ந்து மத்திய சிறையில் இருந்து நேற்று முன்தினம் அவரின் உறவினரின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற பொழுது மேலகால் அருகே மோட்டார் சைக்கிளின் பின்னால் வந்த கார் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“முதியோர் உதவித்தொகை வாங்கித் தருவதாக நகை அபகரிப்பு”…. இரண்டு பேர் கைது….!!!!!

மூதாட்டியிடம் முதியோர் உதவித்தொகை வாங்கித் தருவதாக கூறி நகையை அபகரித்துச் சென்று இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் அருகே இருக்கும் ரயில்வே பீடரோடு பகுதியை சேர்ந்த பாண்டி என்பவரின் மனைவி ரஞ்சிதம். இவர்களுக்கிடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக சென்ற எட்டு வருடங்களாக பிரிந்து வாழ்கின்ற நிலையில் ரஞ்சிதத்திற்கு கண்ணில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சிந்தாமணியில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு சென்ற பொழுது இளைஞர் ஒருவர் அவரிடம் நைசாக பேச்சு கொடுத்த பொழுது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“நேரு சிலையின் பீடத்தின் மீது கார் மோதியதால் சேதம்”…. காங்கிரஸ் கட்சியினர் மறியல்…!!!!!

நேரு சிலையின் பீடத்தின் மீது கார் மோதியதால் சேதம் அடைந்தது. மதுரை மாவட்டத்தில் உள்ள தமுக்கம் மைதானத்திற்கு எதிரே நேரு சிலை இருக்கின்றது. இந்த சிலை 1989-ஆம் வருடம் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியால் திறந்து வைக்கப்பட்டதாகும். இந்த நிலையில் நேற்று இரவு கார் ஒன்று சிலை அமைக்கப்பட்டிருந்த பீடத்தின் மீது மோதியதால் பீடத்தின் சுவர் சேதமடைந்தது. இதனால் உரிய நடவடிக்கை எடுக்க கோரி காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில் சிலை முன்பாக மறியலில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“சட்ட விதிமுறைகளை பின்பற்றினால் திருமண பதிவு சான்றிதழ் வழங்கலாம்”…. மதுரை ஐகோர்ட் நீதிபதி உத்தரவு….!!!!!

சட்ட விதிமுறைகளை பின்பற்றினால் திருமண பதிவு சான்றிதழ் வழங்கலாம் என மதுரை ஐகோர்ட் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள திருசுழியைச் சேர்ந்த சரத்குமார் என்பவர் லெடியா என்பவரை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் சென்ற ஜூன் மாதம் பத்தாம் தேதி திருமணம் செய்து கொண்ட நிலையில் தங்கள் திருமணத்தை சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்ய கோரி சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்று ஜூன் 17ஆம் தேதி கேட்டபொழுது சார் பதிவாளர் லெடியாவுக்கு 21 வயது பூர்த்தியாகவில்லை என […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“மகன் இறுதி சடங்கில் மயங்கி விழுந்த தந்தை”…. உயிர் பிரிந்த சோகம்…. பின்னணி என்ன……?

மகனின் இழப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் இறுதி சடங்கில் தந்தை மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை கீரைத்துறை ஆதிமூலம் பிள்ளை சந்து பகுதியை சேர்ந்த கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் சிவஆனந்த மணி தனியார் கல்லூரியில் இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவ ஆனந்தமணி திடீரென விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஜெயிலில் இருந்து வெளிவந்த ரவுடி….. மர்ம கும்பலின் வெறிச்செயல் …. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

குற்றவாளியை கொலை செய்த கும்பலை காவல்துறையின தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு  பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீது  கொலை வழக்குகள் உள்ளது. இந்நிலையில் நேற்று சிறையில் இருந்து  வெளியே  வந்த சக்திவேல் மோட்டார் சைக்கிளில் மேலகால் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக காரில்  வந்த மர்ம கும்பல் சக்திவேலை பின் தொடர்ந்து சென்று அவரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த சக்திவேல் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“கள்ள காதலை கைவிடு” இரும்பு கம்பியால் அடித்து பெண் படுகொலை…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மனைவியை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள கல்லுப்பட்டி கிராமத்தில் தொழிலாளியான  கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகாம்பாள் என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் முருகாம்பாளுக்கும்   அதே பகுதியை சேர்ந்த முத்துராமன் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனை அறிந்த கிருஷ்ணன் முருகாம்பாளிடம்  கள்ள காதலை கைவிடும் படி கூறியுள்ளார். ஆனால் முருகம்பாள் நான் கள்ள காதலை கைவிட […]

Categories
மாநில செய்திகள்

இனி சென்னை செல்லாது…. மதுரை செல்லும் ரயிலில் புதிய மாற்றம்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

மதுரைக்கு செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை எழும்பூரில் இருந்து பிற்பகல் 1.50 மணிக்கு புறப்படும்.  தற்போது சென்னை எழும்பூரில் இருந்து விழுப்புரம் வரை தாம்பரம் யார்டில் இன்று காலை 9:55 முதல் பிற்பகல் 1:55 வரை முக்கிய பணிகள் நடைபெற உள்ளது. இதனால் செங்கல்பட்டில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று செங்கல்பட்டில் இருந்து பிற்பகல் 2.40 மணிக்கு வைகை எக்ஸ்பிரஸ் புறப்படும். […]

Categories
மாநில செய்திகள்

இன்று(ஜூன் 28) முதல் அமல்…. மாஸ்க் அணியாமல் சுற்றினால் ரூ.500 அபராதம்…. மதுரை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,ஈரோடு மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால் அந்தந்த மாவட்டங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அதன்படி பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை, கோவை,காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு மாவட்டத்தில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி மதுரையில் […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அரசு – தனியார் பள்ளி, கல்லூரிகளில் கட்டுப்பாடு…. மாவட்ட நிர்வாகம் அதிரடி….!!!!

தமிழ்நாட்டில் பிஏ5 என்ற ஒமைக்ரான் பாதிப்பு 25 சதவீதம் வரை தற்போது பரவி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை தொடர்ந்து செய்தாலே கொரோனா தொற்றை தடுக்கலாம் என்று தெரிவித்துள்ளது. ஒரு சில மாவட்டங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மதுரையில் பொது இடங்களில் முகக் கவசம் அணியாவிட்டால் 500 அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் .அரசு மற்றும் கல்வி நிறுவனங்கள், […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“2 முறை எச்சரிக்கை” பிரபல பன் பரோட்டா கடைக்கு சீல்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

தரமற்ற முறையில் உணவு தயாரித்த பிரபல கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மதுரை மாவட்டத்திலுள்ள சாத்தமங்கலம்-ஆவின் சந்திப்பில் பிரபல பன் பரோட்டா கடை செயல்பட்டு வந்துள்ளது. இந்த கடையில் சுகாதாரமற்ற முறையில் உணவுகள் தயாரித்து விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ஜெயராம பாண்டியன் தலைமையிலான அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது தரமற்ற முறையில் உணவுகள் தயார் செய்யப்படுவதும், […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திருமண மண்டபம் கட்டும் பணி…. இடிபாட்டில் சிக்கி பலியான தொழிலாளி…. மதுரையில் பரபரப்பு…!!

சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை சாலையில் விவேக் என்பவர் தனது சொந்தமான இடத்தில் திருமண மண்டபம் கட்டி வருகிறார். இந்நிலையில் தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென கட்டிட சுவர் இடிந்து விழுந்தது. அப்போது கட்டிட தொழிலாளியான ஆறுமுகம் என்பவர் இடிபாட்டில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் ஆறுமுகத்தை மீட்க முயற்சி செய்தும் அவர்களால் முடியவில்லை. பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தகராறு செய்த போலீஸ்காரர்…. எச்சரித்த சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்…. சிவகங்கையில் பரபரப்பு…!!

போலீஸ்காரர் சப்- இன்ஸ்பெக்டரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டியில் பரமசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிவகங்கை மாவட்டத்திலுள்ள பூவந்தி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் பரமசிவம் பூவந்தி சோதனை சாவடியில் பணியில் இருந்துள்ளார். அப்போது அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் கடை வைத்திருக்கும் பாஸ்கரன் என்பவர் சப்-இன்ஸ்பெக்டரிடம் முத்துப்பாண்டி என்பவர் தன்னுடன் தகராறு செய்வதாக கூறியுள்ளார். இதனால் சப்-இன்ஸ்பெக்டர் மற்றொரு போலீஸ்காரருடன் அங்கு சென்று முத்துப்பாண்டியை அழைத்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம்…. யாரும் ஏமாற்ற முடியாது…. நடிகர் சூரி தடாலடி…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையின் வளாகத்தில் நடிகர் சூரி தனியார் உணவகத்தை கட்டியுள்ளார். இந்த உணவகத்தை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூரி, மேயர் இந்திராணி, டீன் ரத்தினவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு நடிகர் சூரி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் விடுதலை படம் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது என்றும், இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை படத்திற்காக கடுமையாக உழைத்துள்ளார் என்றும் கூறினார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. தெற்கு ரயில்வே நிர்வாகத்தின் சூப்பர் அறிவிப்பு….!!!

தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் இருந்து கூடுதலாக சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு தெற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி மதுரையில் இருந்து காலை 11:30 மணிக்கு புறப்படும்  ரயில் மாலை 3:20 மணிக்கு செங்கோட்டையை சென்றடையும். இந்த ரயில் செங்கோட்டையில் இருந்து மறுநாள் காலை 11:50 மணிக்கு புறப்பட்டு மாலை 3:35 மணிக்கு மதுரையை வந்தடையும். இந்த ரயில் தென்காசி, கடையநல்லூர், பாம்பகோவில் சந்தை, சங்கரன்கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

உடனடியாக கடையை பூட்டி சீல் வைக்க வேண்டும்…. வசமாக சிக்கிய வாலிபர்…. அதிரடி உத்தரவிட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர்….!!!!

போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கடையை  அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள பேரையூர் பகுதியில் சம்சுதீன் என்பவர்  குளிர்பான கடை ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். இவரது கடையில் சட்டவிரோதமாக குட்கா பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் சட்டவிரோதமாக குட்கா  பதுக்கி வைத்திருப்பது உறுதியானது. இதனையடுத்து காவல்துறையினர் கடையில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

டீ வாங்குவதற்காக சென்ற தொழிலாளி…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. மதுரையில் பரபரப்பு…!!

மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள செமினிபட்டி மேற்கு தெருவில் தியாகராஜன்(52) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தியாகராஜன் டீ வாங்குவதற்காக மதுரை- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் குட்லாடம்பட்டி மேம்பாலம் அருகே மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது தியாகராஜனின் மொபெட் மீது பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த தியாகராஜன் சம்பவ […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இளம்பெண் தற்கொலை வழக்கு…. கணவர் உள்பட 5 பேருக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி பகுதியில் ஓட்டுநரான மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு வரதட்சணை கொடுமையால் சசிகலா தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன், அவரது தாயார் தங்கதாய், தந்தை ராமன், சகோதரி மாலதி, மாலதியின் கணவர் கிங், […]

Categories
மாநில செய்திகள்

“இறந்தும் 5 பேருக்கு வாழ்வளித்த கல்லூரி மாணவன்”….. கண்கலங்க வைக்கும் சம்பவம்….!!!

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் விபத்து ஒன்றில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மருத்துவர்கள் அவரின் உடல்களை உறுப்பு தானம் செய்ய பெற்றோரிடம் அனுமதி கேட்டுள்ளனர். இதற்கு அவரின் பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். பின்னர், மதுரையிலிருந்து இளைஞரின் இருதயம் மற்றும் நுரையீரல் தனி விமானம் மூலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு இருவருக்கு பொருத்தப்பட்டது. மேலும் இளைஞரின் சிறுநீரகம், கல்லீரல் மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 2 பேருக்குப் பொருத்தப்பட்டது.

Categories
மாநில செய்திகள்

90’ஸ் கிட்ஸ் பரிதாபம்…. தெருவெங்கும் மணமகள் தேவை சுவரொட்டி…. வைரல்….!!!!

மதுரையில் மணப்பெண் தேவை என்ற சுவரொட்டிகள் மூலம் பெண் தேடும் வாலிபரின் செயல் 90ஸ் கிட்ஸ் மத்தியில் ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரையின் சுவர்களை அலங்கரிக்கும் அரசியல் சினிமா போஸ்டர்களுக்கு இடையே ஒரு 90’ஸ் இளைஞரின் மணமகள் தேவை போஸ்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஜெகன் என்ற 27 வயது இளைஞர் திருமணம் ஆகாத விரக்தியில் மதுரை மாநகர்,புறநகர் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் தன் தொடர்பு எண் உள்ளிட்ட முழு ஜாதக விவரங்களுடன் கூடிய சுவரொட்டியை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

வாலிபர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சமயநல்லூர் பகுதியில் அழகர்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஷால்(23) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட விஷாலை அவரது பெற்றோர் வீட்டில் வைத்து பராமரித்து வந்தனர். நேற்று திடீரென விஷால் பிளேடால் கழுத்தை அறுத்துள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே விஷால் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

விபத்தில் சிக்கிய கார் மீது மோதிய பேருந்து….. படுகாயமடைந்த 7 பேர்…. மதுரையில் பரபரப்பு…!!

சாலையில் கவிழ்ந்த கார் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 7 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஏழாயிரம்பண்ணை பகுதியில் பரமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் மதுரையில் இருக்கும் குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக காரில் சென்றுள்ளார். அங்கு சாமி கும்பிட்டுவிட்டு மீண்டும் சொந்த ஊர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் மதுரை மாவட்டத்திலுள்ள வெள்ளாகுளம் விலக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென காரின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு….. கணவரின் வெறிச்செயல்…. போலீஸ் அதிரடி….!!

மனைவியை கத்தியால் குத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை மாவட்டத்திலுள்ள மிளகரணை பகுதியில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கீர்த்திகா(24) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த அருண்குமார் கீர்த்திகாவை கத்தியால் குத்தியுள்ளார். இதனால் காயமடைந்த கீர்த்திகா தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அருண்குமாரை கைது செய்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

காதலிப்பதாக கூறிய சிறுவன்…. மாணவிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சிறுவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மதுரை மாவட்டத்தில் உள்ள தல்லாகுளம் பகுதியில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவியை அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுவன் காதலித்துள்ளார். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுவன் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

காதல் விவகாரமா….? இன்ஜினியரிங் மாணவர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

விடுதியில் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த ஹமத் நவாஸ் லோன்(19) என்பவர் மதுரையில் இருக்கும் தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இவர் கல்லூரி விடுதியில் தங்கியுள்ளார். நேற்று முன்தினம் நவாஸ் தங்கியிருந்த அறையின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை. இதனால் சக மாணவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது நவாஸ் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக காவல் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இளம்பெண் தற்கொலை வழக்கு…. கணவர்-மாமியாருக்கு சிறை தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவர் மற்றும் மாமியாருக்கு நீதிமன்றம் 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. மதுரை மாவட்டத்திலுள்ள சமயநல்லூரில் ராஜசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் டாஸ்மாக் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2010-ஆம் ஆண்டு ராஜசேகருக்கு பிரீத்தா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ராஜசேகரும், அவரது தாய் சகுந்தலாவும் இணைந்து கூடுதலாக வரதட்சணை கேட்டு பிரீத்தாவை அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த […]

Categories
மாநில செய்திகள்

மதுரையில் கொட்டி தீர்த்த கனமழை….. கடும் போக்குவரத்து நெரிசல்….. அவுதிப்பட மக்கள்…..!!!!

மதுரையில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் இன்று காலையில் கடுமையான வெப்பம் இருந்தது. இதனைத் தொடர்ந்து மீண்டும் மாலை 5 மணியளவில் கருமேகங்கள் ஒன்று திரண்டு திடீரென மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை 1 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இதனால் தாழ்வான சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதுபோல் நகரின் முக்கிய வீதிகளிலும் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் பெரியார் பஸ் நிலையம், காளவாசல், கோரிப்பாளையம் உள்ளிட்ட […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

துபாய்க்கு கிளம்பிய விமானம்…. திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு…. ஆத்திரத்தில் பொங்கி எழுந்த பயணிகள்….!!!!

  மதுரையில் இருந்து துபாய்க்கு விமான சேவை தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில்  மதுரையில் இருந்து துபாய் செல்வதற்க்காக  தனியார் விமானம் ஒன்று தயாராக இருந்தது. அதில் பயணம் செய்வதற்காக 150 பயணிகள் முன்பதிவு செய்து விமான நிலைய வளாகத்தில் காத்துக்கொண்டிருந்தனர். அதன்பின் அவர்கள் பல்வேறு கட்ட பரிசோதனைக்கு பின்னர் விமானத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பயணிகள் அனைவரும் வாகனத்தில் ஏறி அமர்ந்த பின் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு இருப்பது தெரிய […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

முளைப்பாரி ஊர்வலத்தில் வெடித்த பட்டாசு…. பற்றி எரிந்த பந்தல்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

பட்டாசு வெடித்த போது பந்தல் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள மேலவாசல் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் சந்தனமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. அப்போது பட்டாசு வெடித்தனர். இதனால் அங்கு அமைக்கப்பட்டிருந்த பந்தலில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பந்தலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனாலும் இந்த தீ […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நெல் அள்ளும் பணியில் ஈடுபட்ட வாலிபர்…. மின்னல் தாக்கி பலியான சோகம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மின்னல் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கேசம்பட்டியில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மாலையில் மழை மேகம் சூழ்ந்த நேரத்தில் ராஜா நெல் அள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது திடீரென மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே ராஜா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று ராஜாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. புதுப்பெண் மர்மமான முறையில் மரணம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

புதுப்பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சுந்தர் ராஜபுரத்தில் அழகர்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ராதேவி(22) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் சித்ராதேவிக்கும் விக்னேஸ்வரன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டதால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சித்ராதேவி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் சித்ராதேவி அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து […]

Categories
மாநில செய்திகள்

மதுரை கோயில் திருவிழாவில்…. திடீர் தீவிபத்து….. பெரும் அதிர்ச்சி….!!!!

மதுரை திடீர் நகர் அருகே சந்தனமாரியம்மன் கோயிலில் நடந்த வைகாசி திருவிழாவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதுரை திடீர் நகர் அருகே மேலவாசலில் சந்தனமாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் வைகாசி திருவிழா ஆண்டுதோறும் கொண்டாப்படுகிறது. அந்தவகையில் இந்தாண்டு வைகாசி திருவிழா நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் திருவிழாவின் ஒரு பகுதியாக தீ பந்த விளையாட்டு நிகழ்வு நடைபெற்றது. அப்போது இளைஞர்கள் வெடித்த பட்டாசு பந்தலில் பட்டதால் தீவிபத்து ஏற்பட்டது. இது மளமளவென பரவியதால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தாலாட்டிய தாய்…. தொட்டில் கயிறு அறுந்து 3 மாத குழந்தை பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தொட்டில் கயிறு அறுந்து விழுந்ததால் 3 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள செங்கப்படை கிராமத்தில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புனிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பிரியதர்ஷினி 3 மாத பெண் குழந்தை இருந்துள்ளது. கடந்த 1-ஆம் தேதி புனிதா குழந்தையை தொட்டிலில் போட்டு தூங்க வைப்பதற்காக தாலாட்டியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தொட்டில் கயிறு அறுந்து வளர்ந்ததால் பிரியதர்ஷினிக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருந்த சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கிணற்றில் தவறி விழுந்து சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பட்டூர் பகுதியில் மருதுபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு யாஷிகா ஸ்ரீ(3) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் நடுநிலைப் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை மருதுபாண்டி வேலை பார்க்கும் தோப்பில் யாஷிகா ஸ்ரீ விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுமி தோப்பில் இருந்த கிணற்றில் தவறி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா…. ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் கொலை…. மதுரையில் பரபரப்பு…!!

ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள தேனூர் கிராமத்தில் ஜோதிமுத்து(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி உள்ளார். தற்போது ஜோதிமுத்து சோழவந்தான் ஜெனகை நாராயணபெருமாள் கோவிலில் இரவு காவலராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அப்போது ஜோதிமுத்து நிகழ்ச்சி முடிந்த பிறகு வைகை ஆற்று […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

குப்பைத் தொட்டியில் லாக்கர்…. மர்மநபர்கள் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!!

குப்பைத் தொட்டியில் லாக்கர் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் கோ. புதூரில் வைத்தியநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாரதியார் தெருவில் அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது கடைக்குள் நுழைந்த மர்ம நபர்கள் சிலர் அடகு கடையில் இருந்த லாக்கரை திருடியுள்ளனர். அந்த லாக்கரை ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை எடுத்துச் சென்று உடைப்பதற்கு முயற்சி செய்துள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

“ஜிம்மில் உடற்பயிற்சியின் போது மாரடைப்பால் மரணம்”….. பெரும் சோகம்….!!!!!

மதுரையில் ஜிம்மில் கடும் உடற்பயிற்சி செய்த ஸ்ரீ விஷ்ணு என்ற 27 வயதான இளைஞர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். மதுரை பழங்காநத்தம் திருவள்ளூர் நகர் பகுதியை சேர்ந்த கமலேஷ்வரன் என்பவரின் மகன் ஸ்ரீ விஷ்ணு. இவர் ஐடியில் வேலை பார்த்து வருகிறார். தினமும் மாடக்குளம் பிட்னஸ் சென்டரில் உடற்பயிற்சி செய்து வருகிறார்.  நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அதிக எடை கொண்டு பளு தூக்கும் போது திடீரென […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. யாரும் ஏமாந்துராதிங்க…. பிராண்ட் பெயரில் தயார் செய்யப்பட்ட ரேஷன் அரிசி…!!!!!!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள ஒரு குடோனில் டன் கணக்கில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கப்பட்டுள்ளதாக மாநகர காவல் துறை அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. இதனை அடுத்து மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமார் உத்தரவின் பெயரில் துணை ஆணையர் தங்கதுரை தலைமையிலான தனிப்படை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதனையடுத்து அந்தப் பகுதியில் உள்ள குடோனில் காவலர்கள் சோதனை நடத்தியபோது குடோனில் 20க்கும் மேற்பட்டோர் லாரியில் அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு இருப்பது தெரிய […]

Categories
மாநில செய்திகள்

இனி தமிழக கோவில் திருவிழாவில் நாடகம் நடத்த…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!!

மதுரை மாவட்டம் முதலைகுளம் பகுதியில் கருப்பு என்பவர் வசித்து வருகிறார். இவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், உசிலம்பட்டி அருகில் திருவிழாவின்போது கலைநிகழ்ச்சிகள், ஆடல்-பாடல் மற்றும் நாடகங்கள் நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தார். இந்த மனுவை சென்ற வாரம் விசாரணை மேற்கொண்ட தனிநீதிபதி, ஆடல்-பாடல் மற்றும் நாடகங்கள் நடத்துவதற்கு நிபந்தனைகள் விதித்து அனுமதியளித்தார். அவற்றில் ஆடல்-பாடல் மற்றும் நாடகங்கள் நடத்தும்போது ஆபாச வார்த்தைகள், ஆபாச நடனங்களை அனுமதிக்ககூடாது எனவும் நிகழ்ச்சிகளை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இளம்பெண்ணை மிரட்டிய முதியவர்…. பரிசோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் நடவடிக்கை…!!

இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய முதியவரை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ராசு(60) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 19 வயது இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனை வெளியே கூறினால் கொலை செய்துவிடுவேன் என ராசு அந்த இளம்பெண்ணை மிரட்டியுள்ளார். இந்நிலையில் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது இளம்பெண் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பெற்றோர் விசாரித்த போது இளம்பெண் […]

Categories
மாநில செய்திகள்

ராமேஸ்வரம் – மதுரை மார்க்கத்தில்….. இன்று முதல் மீண்டும் ரயில் சேவை….!!!!

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ராமேஸ்வரம் பயணிகள் ரயில் இன்று முதல் இயக்கப்படும் என மதுரை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இன்று இந்த ரயில்வே வழித்தடத்தில் ரயில் சேவை தொடங்கியது. மதுரை ராமேஸ்வரம் இடையில் காலை மாலை என இருவேளை இயக்கப்பட்டு வந்த ரயில் சேவை கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. முன்னதாக பேரிடர் காலத்தில் நிறுத்திய ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அந்த கோரிக்கையை வலியுறுத்தி தெற்கு […]

Categories

Tech |