Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொரோனாவை ஏவிவிட்டு கிராமத்தை அழிக்கப்போவதாக மிரட்டல்…. போலி சாமியாரால் கிராமமக்கள் அதிர்ச்சி ….!!

மதுரை அருகே கொரோனாவை ஏவிவிட்ட கிராமத்தை அழித்து விடுவதாக மிரட்டல் விடுத்த போலிசாமியாருக்கு பயந்து முடங்கிக் கிடக்கும் கிராம மக்கள். தெக்கள் கிராமத்தில் கிருமி நாசினி தெளிக்க கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு தந்தனர். உசிலம்பட்டியில் உள்ள கூறநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தங்கப்பாண்டி என்ற சாமியார் வசியம் செய்வதாக கூறி பெண்களை ஏமாற்றி பணம் பறித்ததாக பாதிக்கப்பட்டவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் தொடர்பாக சாமியாரை நேரில் வரவழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர் . இதனையடுத்து பண்ணைபட்டி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

போட்ட சோற்றுக்கு நன்றி கடன்…. ரூ30,000 கொரோனா நிதி வழங்கிய பிச்சைக்காரர்….!!

மதுரை மாவட்ட ஆட்சியரிடம் பிச்சைக்காரர் ஒருவர் 3 வது முறையாக ரூ10,000 நிதி என 3 முறை வழங்கியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், ஊரடங்கு தொடர்ந்து 5 வது கட்ட நிலையில், அமுலில் உள்ளது. பலர் வேலை வாய்ப்பை இழந்து வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு பல தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் என பலர் நிவாரண உதவி அளித்து வருகின்றனர்.இந்நிலையில் குடும்பத்தினரால் கைவிடப்பட்ட பிச்சைக்காரர் ஒருவர், […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் மட்டும் ஒரே மாதத்தில்…. 1,413 குழந்தைகள் பிறப்பு…. மத்திய அரசு பாராட்டு..!!

மதுரையில் ஒரே மாதத்தில் குழந்தை பிறப்பு எண்ணிக்கை 1,413 என பதிவாகியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு 5வது கட்ட நிலையில் அமலில் உள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டு அரசு மருத்துவமனைகளும், அரசு அனுமதி அளித்த தனியார் மருத்துவமனைகளும் மட்டுமே செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில், மதுரை அரசு மருத்துவமனை தமிழகத்திலேயே மிகப் பெரிய அளவிலான மருத்துவமனைகளில் ஒன்று. இங்கு மதுரை மட்டுமல்லாமல் விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திருமணத்தை மீறிய உறவு… மனைவியை கண்டித்த கணவன்… ஊற்றிக்கொடுத்து தீர்த்து கட்டிய கள்ளக்காதலன்..!!

திருமணத்தை மீறிய உறவில் இருந்தவருடன் சேர்ந்து கணவரை  மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள விளாச்சேரி மொட்ட மலையை சேர்ந்தவர் கருப்பையா.. இவருக்கு 42 வயதாகிறது..  கருப்பையாவுக்கு 32 வயதில் பொன்னம்மாள் என்ற மனைவி இருக்கிறார்.. இந்த தம்பதியருக்கு 2 பிள்ளைகளும் உள்ளனர். வளையல் வியாபாரம் செய்துவரும் கருப்பையா நேற்றிரவு வீட்டின் வெளியே உறங்கிக்கொண்டிருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலையில் இவரது மனைவி பொன்னம்மாள் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தபோது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சிறுமியை கர்ப்பமாக்கி… வேறொரு பெண்ணை மணக்க முயன்ற காதலன்… மண்டபத்தில் மடக்கிய போலீஸ்…!!

சிறுமியை கர்ப்பமாக்கி மற்றொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்றவரை போக்சோவில் காவல் துறையினர் கைது செய்தனர். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கரட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 16 வயதுடைய  சிறுமிக்கும், நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய உதயகுமார் என்ற இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு லவ்வாக  மாறியது. தான் உன்னை கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று ஆசைவார்த்தைக் கூறி உதயகுமார் அந்த பெண்ணிடம் மிகவும் நெருங்கி பழகி தனிமையில் இருந்துள்ளார்.. இதனால் கர்ப்பமடைந்த சிறுமி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பட்டப்பகலில் கத்தியை காட்டி மிரட்டி ஜவுளி கடையில் கொள்ளை…!!

ஜவுளிக்கடையில் கத்தியைக் காட்டி மிரட்டி, துணிமணிகளை பட்டப்பகலில் கொள்ளையடித்துச் சென்ற ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். மதுரை மாநகரின் செல்லூர் பகுதியில் குரு என்பவருக்குச் சொந்தமான ஜவுளிக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஜவுளிக் கடையில் துணி வாங்குவதுபோல், வந்த 2 இளைஞர்கள் ரூ 20,000 மதிப்புள்ள துணிகளை எடுத்துவிட்டு, பணம் கொடுக்காமல் ஊழியரிடம் கத்தியைக் காட்டி, மிரட்டி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்தசம்பவம் குறித்து தகவலறிந்த செல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கிருந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை… 4 பேர் கைது..!!

ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை, அலங்காநல்லூர் பகுதியில் ஆன்லைன் மூலமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அலங்காநல்லூர் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சமயநல்லூரை சேர்ந்த சப்பாணி(வயது 46), மேலசின்னம்பட்டி அர்ச்சுனன்(வயது 40), கல்லணை பிரசாத்(வயது 23), கொண்டையம்பட்டி சத்தியசீலன்(வயது 38) ஆகிய 4 பேரை காவல் துறையினர் கைது செய்து, மேலும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மதுரை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை..!!

தமிழகத்தின் பல இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. கும்பகோணம், தென்காசி, செய்யாறு, மதுரை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. அதேபோல, அவிநாசி, சூளை,சேலையூர்,காசிக்கவுண்டன்புதூர், காமராஜ்நகர், உள்ளிட்ட சுற்றுவட்டார இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மதுரை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மழை பெய்தது. மதுரை, மாட்டுத்தாவணி, அண்ணாநகர், தெப்பக்குளம், கோரியபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், குச்சிபாளையம், பாண்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெரிது வருகிறது.

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பட்டதாரி வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை… குடும்ப தகராறு காரணமா?… போலீஸ் விசாரணை…!!

திருமங்கலத்தில் பட்டதாரி வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் முன்சீப் கோர்ட் ரோடு பகுதியில் தபால் அலுவலகமும், அரசு மருத்துவமனையும் உள்ளது. இன்று காலை அப்பகுதியில் 27 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வாயில் நுரை தள்ளியவாறு கீழே விழுந்து கிடந்தார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விரைந்து வந்து பரிசோதனை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“டிக்டாக்கில் ஆசையாக பேசியதால் மயங்கிய இளைஞர்”… 97,000 ரூபாயை சுருட்டிய இளம்பெண்..!!

டிக்டாக் மூலம் பேசி பழகி இளைஞரை மயக்கி 97,000 ரூபாய் மோசடிசெய்த இளம் பெண்ணை போலீசார் வலைவீசித் தேடிவருகின்றனர். மதுரை எல்லீஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (24). இவர் ஒரு காலேஜில் பயின்று வருகிறார். இவருக்கு டிக்டாக் மூலமாக திருப்பூரைச் சேர்ந்த சுசி என்ற இளம்பெண்ணிடம் பழக்கம் ஏற்பட்டது.. இருவரும் கடந்த ஓராண்டாகப் ஆசையாக பேசி பழகி வந்துள்ளனர். இந்நிலையில் பல்வேறு காரணங்களைக் பொய் காரணங்களை கூறி சுசி, ராமச்சந்திரனிடமிருந்து சுமார் ரூ 97 ஆயிரம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மருத்துவமனையில் நோயாளி ஒருவர் வெட்டிக்கொலை… மர்ம நபர்களுக்கு வலைவீச்சு..!!

அரசு இராசாசி மருத்துவமனையில் நோயாளி ஒருவர் இன்று அதிகாலை வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் இன்று அதிகாலை நோயாளி ஒருவர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலைசெய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையயும் ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் குறித்து மதுரை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள கரும்பாலையில் வசித்துவரும் முருகன் என்பவர் நரம்புத் தளர்ச்சி காரணமாக கடந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

9 மாத ஆண் குழந்தை சட்டவிரோத தத்தெடுப்பு… தம்பதியர்கள் மீது போலீசார் நடவடிக்கை..!!

மதுரையில் 9 மாத ஆண் குழந்தை சட்டவிரோதமாக தத்தெடுக்கப்பட்டது தொடர்பாக 2 தம்பதியர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மதுரை மாநகர் செல்லூர் போஸ் வீதியைச் சேர்ந்தவர்கள் ராபர்ட் – மேரி தம்பதியர். இவர்களுக்கு ஏற்கனவே 3 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்தநிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேரிக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அந்தகுழந்தையை அதே பகுதியில் உள்ள ஷாஜகான் – நாகூரம்மாள் தம்பதியருக்கு சட்ட விரோதமாக தத்து கொடுத்திருப்பதாக மதுரை […]

Categories
அரசியல் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மதுரைக்குள் நடக்கும் சுவரொட்டி போர்…! அம்பலமாகிய அதிமுக உட்கட்சி அரசியல் …!!

அதிமுக அமைச்சர்களுக்கும் இருக்கும் உள்கட்சி பூசல் தற்போது அம்பலமாகி  கட்சி தலைமைக்கு பெருத்த சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரையைச் சேர்ந்த அமைச்சர்களான செல்லூர் ராஜீ, ஆர்.பி உதயகுமார் இருவருக்கும் மாவட்டத்திற்குள் உரசல் இருப்பதாக தகவல் கசிந்து வந்தன. இதனால் கொரோனா நிவாரண நிதி வழங்குவதிலும் இருவருக்கும் கடும் போட்டி நிலவியது. இந்தப் போட்டி தற்போது உட்கட்சி பூசல் வெளிப்படுத்தி ஆளும் அதிமுகவுக்கு பெருத்த சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக கொரோனா நிவாரண உதவி வழங்கிய அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம் – முன்பதிவு தொடங்கியது!

ஜூன் 1ம் தேதி முதல் இயக்கப்பட உள்ள சிறப்பு ரயிலுக்காக டிக்கெட் முன்பதிவு மதுரை, ஈரோட்டில் தொடங்கியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி முதல் 4 வழித்தடங்களில் ஏசி இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. கோவை – மயிலாடுதுறை (திருப்பூா், ஈரோடு, கரூா், திருச்சி, தஞ்சை, கும்பகோணம் நிலையங்களில் நிற்கும். செவ்வாய்க்கிழமையில் ரயில் இல்லை.), மதுரை – விழுப்புரம் (திண்டுக்கல், திருச்சி, […]

Categories
மாநில செய்திகள்

மதுரை, வேலூர், தென்காசி உட்பட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை!

மதுரை மாநகரில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. திருப்பரங்குன்றம், அவனியாபுரம், பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் இடியுடன் மழை பெய்து வருகிறது. தென்காசி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களான ஆலங்குளம், சுரண்டை, பாவூர்சத்த்திரம், ரெட்டியார்பட்டி,வீரகேளம்புதூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. வேலூர் மற்றும் காங்கேயம், வள்ளலார், சத்துவாச்சாரி, காதிப்பட்டறை பகுதிகளால் மிதமான மழை பெய்து வருகிறது. நெல்லை, பாளையங்கோட்டை, கேடிசி நகர், தச்சநல்லூர் மற்றும் அதன் […]

Categories
சேலம் மதுரை மாநில செய்திகள்

கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களில் சேலத்தில் 13 பேர், மதுரையில் 19 பேர் இன்று டிஸ்சார்ஜ்!

சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 13 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சேலத்தில் இதுவரை 58 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு தற்போது 19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒரே நாளில் 19 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். துரையில் இதுவரை 231 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 118 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் இரண்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மதுவிற்பனை: நேற்று மட்டும் ரூ.141.4 கோடி வசூல்… மதுரையில் ரூ.34.3கோடிக்கு விற்பனை!

தமிழகத்தில் திறக்கப்பட்டுள்ள மதுக்கடைகளில் நேற்று ஒரே நாளில் ரூ.141.4 கோடி வசூல் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.34.3 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னையில் ரூ.18 கோடிக்கும், திருச்சியில் ரூ.32 கோடிக்கும், சேலத்தில் ரூ.33 கோடிக்கும், கோவையில் ரூ.32 கோடிக்கும் விற்பனையாகியுள்ளது. மதுவிற்பனை வசூல் கடந்த சனிக்கிழமை அன்று ரூ.120 கோடிக்கு விற்பனையானது. அதில், சென்னையில் 17 கோடி ரூபாய்க்கும், திருச்சியில் ரூ.26 க்கும், மதுரையில் 27 கோடி ரூபாய்க்கும், சேலத்தில் ரூ.25 […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 8 வருடங்கள் இணை ஆணையராக இருந்த நடராஜன் பணியிட மாற்றம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணை ஆணையராக இருந்த நடராஜன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 8 வருடங்களுக்கு பிறகு சேலம் மண்டல அறநிலைய துறை இணை ஆணையராக நடராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்து சமய அறநிலைய துறையில் ஒரு இடத்தில் 3 வருடமே பதவியில் இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் இணை ஆணையராக நடராஜன் கடந்த 2014ம் வருடம் ஜூன் மாதம் 2ம் தேதி அன்று பணியமர்த்தப்பட்டார். சுமார் […]

Categories
சற்றுமுன் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ரமலான் தொழுகை நடத்த அனுமதி – வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் …!!

ரமலான் தொழுகை நடத்த அனுமதி கோரிய வழக்கு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு ஊரடங்கு பிறப்பித்தது, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் சில தளர்வுகள் விதிக்கப்பட்டுள்ளன. தற்போது முஸ்லிம்கள் ரமலான் நோன்பு இருப்பதால் மே 25ஆம் தேதி மதுரையில் உள்ள பள்ளிவாசலில் 9 காலை 11 மணி வரை இரண்டு மணி நேரம் சிறப்பு தொழுகை நடத்த அனுமதி தர வேண்டும் என்று […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இதுவும் பெண் குழந்தை….! ”4 நாளான சிசு கொலை” மதுரையில் கொடூரம் …!!

பிறந்து 4 நாட்கள் ஆன பெண் சிசு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியை சேர்ந்த தவமணி சித்ரா தம்பதிக்கு ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகளை இருந்த நிலையில் நான்காவதாக கடந்த 10ம் தேதி மீண்டும் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. பெண் குழந்தை பிறந்து நான்காவது நாளில் உடல் நலக்குறைவால் இறந்ததாக, அந்த சிசுவை அவர்கள் வீட்டின் அருகே இருக்கக்கூடிய முட்புதரில் புதைக்கிறார்கள். இதனால் அந்த பகுதி மக்கள் சந்தேகம் அடைந்த நிலையில் […]

Categories
கடலூர் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கடலூரில் 50, மதுரையில் 19 என கொரோனவால் பாதிக்கப்பட்ட 69 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்!!

இன்று கடலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 50 பேரும், மதுரையில் 19 பேரும் குணமடைந்ததால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கடலூர் மாவட்டத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்ட சுமார் 50 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கோயம்பேட்டில் இருந்து வந்த 320 தொழிலாளர்கள் உள்பட 416 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஏற்கனவே 27 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். நேற்று கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 146 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இந்த […]

Categories
கரூர் சேலம் தர்மபுரி திருச்சி மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

மதுரை, திருச்சி உள்பட 6 மாவட்டங்களில் 41℃ வரை வெப்பநிலை பதிவாகும்: வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் மதுரை, திருச்சி, கரூர், சேலம், தர்மபுரி, வேலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் திருத்தணியில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்ஸியஸ் முதல் 41 டிகிரி செல்ஸியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்து வரும் இரு தினங்களுக்கு விவசாயிகள் மட்டும் பொதுமக்கள் முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 03.30 மணி வரை திறந்த வெளியில் வேலை செய்வதை தவிர்க்குமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. இது தவிர ஏனைய மாவட்டங்கள் […]

Categories
மாநில செய்திகள்

மதுரை, விருதுநகர், கோவை, நீலகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

அடுத்த 48 மணி நேரத்திற்கு மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதனால் அடுத்த 48 மணி நேரத்தில் மதுரை, விருதுநகர், தேனி, நெல்லை, தூத்துக்குடி, கோவை, நீலகிரி, சேலம், ராமநாதபுரம், குமரி ஆகிய 10 மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை […]

Categories
சற்றுமுன் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தந்தை மது அருந்தியதால் மகள் தீக்குளிப்பு – மதுரையில் சோகம் …!!

தந்தை மது அருந்தி வீட்டுக்கு வந்ததால் மகள் தீக்குளித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவின் தாக்கத்தின் காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இன்று ஊரடங்கின் 44 ஆவது நாள் நடைபெற்று வரும் நிலையில் 2 நாட்களுக்கு முன்னதாக தமிழக அரசு மதுக் கடைகளைத் திறக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்தது. ஊரடங்கில் சில தளர்வுகளை மத்தியஅரசு கொடுத்த நிலையில் தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்தது. இதற்கு தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள், குறிப்பாக அதிமுக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

உயிரிழந்த மாமனார்… “சடலத்தை பார்த்து கதறி அழுத மருமகள்”… விசாரணையில் அதிர்ச்சியடைந்த மக்கள்.. ஓவர் ஆக்டிங்கால் சிக்கினாரா?

முதியவரை சொத்துக்காக மகன் மற்றும் மருமகள் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இருக்கும் உத்தப்புரம் பகுதியை  சேர்ந்தவர் ராசு இவர் கடந்த மாதம் 22ஆம் தேதி மர்மமான முறையில் தோட்டத்தில் கொலை செய்யப்பட்டு இறந்துகிடந்தார். ராசுவின் உடலை பார்த்த அவரது மகன் மற்றும் மருமகள் அழுது புரண்டு உள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொலை செய்த மர்ம நபர்களை தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கஷ்டப்பட்ட முதியவர்… வாட்ஸ்அப்பில் வந்த தகவல்… ஓடோடி வந்து உதவிய கலெக்டர்!

குதிரையை வைத்து சம்பாதித்து வந்த முதியவர் ஊரடங்கினால் உணவின்றி தவிப்பதாக வாட்ஸ்அப்பில்  கிடைத்த தகவலின் அடிப்படையில் ஆட்சியர் முதியவருக்கு உதவி புரிந்துள்ளார் நாடு முழுவதும் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதால் வேலையின்றி வருமானமின்றி பலதரப்பட்ட மக்கள் வறுமையில் சிக்கி தவிக்கின்றனர். அவ்வகையில் மதுரை வடக்கு வட்டத்திற்கு உட்பட்ட கட்டபொம்மன் நகரில் குதிரை வளர்க்கும் குதிரை காந்தி என்ற முதியவர் தனது மூன்று குதிரைகளோடு வாழ்ந்துவருகிறார். குதிரைகள் மூலம் கிடைத்து வந்த வருமானத்தில் குதிரை காந்தி தனது மனைவியுடன் வாழ்க்கை நடத்தி வந்தார். […]

Categories
கோயம்புத்தூர் சென்னை மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றுடன் முழு ஊரடங்கு நிறைவு… 3 மாநகராட்சிகளுக்கு மட்டும் சிறப்பு சலுகை.. தமிழக அரசு..!

சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் நாளை மட்டும் காய்கறி, மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய 5 மாநகராட்களில் முழு ஊரடங்கை கடந்த 24ம் தேதி தமிழக அரசு வெளியிட்டது. சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் ஏப்.26ம் தேதி காலை முதல் 29ம் தேதி இரவு வரை முழு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சென்னை, கோவை, மதுரை மாநகராட்சிகளில் நாளை மட்டும் மாலை 5 மணி வரை கடைகள் திறக்க அனுமதி!

சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் நாளை மட்டும் காய்கறி, மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,058ஆக உயர்ந்துள்ளது. கொரோனோவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. எனினும் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பரவலை […]

Categories
தேசிய செய்திகள் மதுரை மாவட்ட செய்திகள்

நிலத்தை எடுத்துகோங்க…! ”பிரதமருக்கு கடிதம்” அசத்திய மதுரை மாணவி ….!!

கொரோனாவால் இறந்தவர்களை அடக்கம் செய்ய தங்கள் நிலத்தை எடுத்துக்க பள்ளி மாணவி பிரதமருக்குக் கடிதம் எழுதியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மதுரை மாவட்டத்தில் 9 ஆம் வகுப்பு மாணவி கொரோனா தொற்று பாதித்து இறந்தவர்களை புதைப்பதற்கு அவர்களது விவசாய நிலத்தை எடுத்துக்கொள்ளுமாறு பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளது அனைவரது மனதையும்  நெகிழ வைத்துள்ளது. மதுரையில் ஒரு பகுதியான வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் தென்னரசி என்ற  மாணவி இந்திய பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். […]

Categories
மதுரை மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி : மதுரையில் புகழ்பெற்ற கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து!

கொரோனா காரணமாக மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து செய்யப்படுவதாக அழகர் கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். தமிழ்நாட்டில் புகழ்பெற்ற திருவிழாக்களில் முக்கியமானது மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழா. இந்த ஆண்டு திருவிழா ஏப்ரல் 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 6ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பது. திருவிழா நாட்களில் தினந்தோறும் மீனாட்சி அம்மனும் சுந்தரேஸ்வரரும் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி […]

Categories
மாநில செய்திகள்

மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்ற முதல்வர் பழனிசாமி… முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்!

சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்களில் முழு ஊரடங்கு கடைபிடிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று உத்தரவிட்டார். முழு ஊரடங்கு காலத்தில் மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த பணிகள் மட்டும் நடைபெறும். அம்மா உணவகங்கள், ஏடிஎம்கள் வழக்கம் போல செயல்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் சென்னை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் கடைகள் இயங்காது என தமிழக அரசு அறிவித்தது. 26ம் தேதி முதல் 29 வரை சென்னையில் மளிகை, இறைச்சி, பேக்கரி கடைகள் […]

Categories
மாநில செய்திகள்

முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட இடங்களில் இன்று மட்டும் 3 மணிவரை கடைகள் திறந்திருக்க அனுமதி!

சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூரில் இன்று மட்டும் பிற்பகல் 3 மணிவரை கடைகள் திறந்திருக்க அனுமதி அளிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். கொரோனா பரவலை தடுக்க நகர்ப்புறங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்களில் முழு ஊரடங்கு கடைபிடிக்க நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதன்படி சென்னை, கோவை, மதுரையில் நாளை காலை முதல் 29ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சென்னை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் கடைகள் இயங்காது; பெட்ரோல் பங்க் செயல்படும் – தமிழக அரசு அரசாணை!

தமிழகத்தில் இன்று மேலும் 72 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,755 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்களில் முழு ஊரடங்கு கடைபிடிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னை, கோவை, மதுரையில் 26ம் தேதி காலை முதல் 29ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு அமல்படுத்தவும், சேலம், திருப்பூரில் 26ம் தேதி காலை முதல் 28ம் தேதி இரவு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 மாநகராட்களில் முழு ஊரடங்கு அமல் – எவையெல்லாம் செயல்படும் ; முழு விவரம்!

சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்களில் முழு ஊரடங்கு கடைபிடிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னை, கோவை, மதுரையில் 26ம் தேதி காலை முதல் 29ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு அமல்படுத்தவும், சேலம், திருப்பூரில் 26ம் தேதி காலை முதல் 28ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு என்றும் கூறியுள்ளார். முழு ஊரடங்கு காலத்தில் எதெற்கெல்லாம் அனுமதி : மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த பணிகள் மட்டும் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்களில் முழு ஊரடங்கு – முதல்வர் அதிரடி அறிவிப்பு!

கொரோனா பரவலை தடுக்க நகர்ப்புறங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்களில் முழு ஊரடங்கு கடைபிடிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னை, கோவை, மதுரையில் 26ம் தேதி காலை முதல் 29ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு அமல்படுத்தவும், சேலம், திருப்பூரில் 26ம் தேதி காலை முதல் 28ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு என்றும் கூறியுள்ளார். முழு ஊரடங்கு காலத்தில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அர்ச்சகரின் தாயார் கொரோனாவால் மரணம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அர்ச்சகரின் தாயார் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தார். மதுரை மேலமாசி வீதியைச் சேர்ந்த மீனாட்சி அம்மன் கோயில் அர்ச்சகரின் 72 வயதான தாயாருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை தமிழக சுகாதாரத் துறை உறுதி செய்தது. இதையடுத்து  அவருக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நள்ளிரவு சிகிச்சை பலனின்றி இறந்து போனார். அதைத்தொடர்ந்து, பலியான மூதாட்டியின் உடல் தத்தனேரி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.. இவரது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வாகன இ-பாஸ் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்… மதுரையில் காற்றில் விடப்பட்ட சமூக இடைவெளி!

ஊரடங்கு பின்பற்றப்படும் நிலையில் ஒரே நேரத்தில் வாகன இ-பாஸ்கள் வாங்க மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மக்கள் கூட்டமாக வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 31வது நாளாக அமலில் உள்ளது. சுமார் ஒரு மாதத்தை கடந்துள்ள இந்த ஊரடங்கு காலத்தில் நாடு முழுவதும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பிறபிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால், மாவட்டம் விட்டு […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

19 வகை மளிகை பொருட்கள்…ரூ.500க்கு விற்பனை..குடும்ப அட்டை அவசியம் இல்லை..!!

19 வகையான பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பை 500 ரூபாய்க்கு நியாயவிலை கடைகளில் விற்கும்  திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மதுரையில் பொதுமக்களுக்கு சிறப்பு தொகுப்பு விற்பனையை கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு துவக்கி வைத்தார். ஊரடங்கு உத்தரவால் முடங்கியுள்ள பொதுமக்கள் நலன் கருதி 19 வகையான பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு 500 ரூபாய்க்கு நியாய விலை கடையில் விற்பனை செய்யப்படும் என்று முதல் அமைச்சர் அறிவித்திருந்தார். தமிழகம் முழுவதும் உள்ள 29 ஆயிரத்து 486 நியாயவிலை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேவகோட்டையில் பாட்டியுடன் ஊஞ்சலாடிய சிறுவன்… தூண் சரிந்ததால் ஏற்பட்ட சோகம்…!

தேவகோட்டையில்  ஊஞ்சலில் உறங்கி கொண்டிருந்த  பாட்டி மற்றும் பேரன் இருவர் மீதும் தூண் விழுந்ததில், சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் செல்லப்ப செட்டியார் பிள்ளையார் கோயில் உள்ளது. அக்கோயிலின் தென்பகுதியில் காவலாளி காளிமுத்தன் என்பவர் வசித்துவருகின்றார். காளிமுத்தன்  மனைவி 50 வயதான செல்வி அவ்வீட்டில் இருந்த தூணிலும், அருகில் உள்ள வேப்பமரக் கிளையிலும் இணைத்துக் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் படுத்து கிடந்தார். அப்போது விளையாடிவிட்டு மிகவும் களைப்பாய் வந்த அவரது பேரன் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஊரடங்கால் கொடியிலேயே அழுகும் வெற்றிலை.. விவசாயிகள் வேதனை..!!

வெற்றிலையை வெளியூர்களுக்கு அனுப்பி நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் வாட்டத்தை தமிழக அரசு போக்குமா.? ஊரடங்கு உத்தரவால் போக்குவரத்து தடை பட்டதாலும் கடைகள் மூடியதாழும் வெற்றிலை கொடியிலேயே அழுகி வருகிறது.  இதனால் வெற்றிலை போல் அதை பயிரிட்ட விவசாயிகள் வாடி போயுள்ளனர். அரசு இவர்களுக்கு கை கொடுக்குமா, தமிழகத்தில் எல்லா சுபகாரியங்களும் வெற்றிலையுடன் தான் தொடங்கும். அப்படிப்பட்ட வெற்றிலையை ஊரடங்கு உத்தரவால் வெளியூர்களுக்குச் எடுத்து செல்ல முடியாமல் பழுத்து கொடியிலேயே வீணாகி வருகிறது. மதுரை மாவட்டம் சோழவந்தான் வெற்றிலைக்கு […]

Categories
சற்றுமுன் மதுரை மாவட்ட செய்திகள்

பெட்ரோல், டீசலில் தண்ணீர் கலப்பு ? மதுரையில் பரபரப்பு ….!!

மதுரையில் உள்ள உசிலம்பட்டி அருகே இருக்கும் சமத்துவபுரம் பெட்ரோல் பங்கில் தண்ணீர் கலந்து பெட்ரோல் டீசல் விற்பதாக புகார் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 21 நாள் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி கிடக்கின்றனர்.வேலை இழந்து வீட்டில் முடங்கி கிடப்பதால் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டாலும் கூட கொரோனா வைரஸ் விரட்டி அடிப்பதற்கு சமூக விலகல் அவசியம் என்பதை உணர்ந்து தங்களுக்கு ஏற்படுள்ள பொருளாதார […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா பரிசோதனை… ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த தொழிலாளி… காரணம் என்ன?

மதுரையில் கொரோனா பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தொழிலாளி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை முல்லை நகரைச் சேர்ந்தவர் முஸ்தபா. 35 வயதான இவர் கேரளாவில் கூலி வேலை பார்த்து வந்தார். கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதையடுத்து முஸ்தபா தனது சொந்த ஊர் திரும்பினார். முஸ்தபா கேரளாவில் இருந்து வந்துள்ளதால்  பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் போலீசாருக்கும், சுகாதாரத்துறைக்கும் தகவல் அளித்தனர். இதையடுத்து சுகாதாரத்துறையினர் விரைந்து வந்து, முஸ்தபா மற்றும் […]

Categories
மதுரை மாநில செய்திகள்

மதுரையில் ஆட்டு இறைச்சி கடைகள் வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை மூடல்!

மதுரையில் ஆட்டு இறைச்சி கடைகள் வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 236ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டுமே 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் பொதுமக்கள் அத்தியாவசிய பணிகளுக்காக வெளியே வருவது தொடர்கதையாக உள்ளது. ஏப்., 14ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய பணிகளை தவிர மக்கள் வெளிய வரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. முக்கிய கடைகள் மட்டும் நேர […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

144 தடை உத்தரவு… மதுரையில் 300 பேர் கைது… 752 வாகனங்கள் பறிமுதல்!

மதுரையில் 144 தடை உத்தரவை மீறியவர்கள் மீது 265 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 300 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனோ வைரஸ் பரவுவதை தடுக்க தமிழக அரசு மார்ச் 23 ஆம் தேதி 144 தடை உத்தரவை பிறப்பித்தது. மேலும் அத்தியாவசிய தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தியது. ஆனால் பலரும் தடையை மீறி தேவையில்லாமல் வெளியே உற்றித்திரிவதால் தமிழகம் முழுவதும் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து வருகின்றனர். அந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தனக்கு கொரோனா இருப்பதாக வீடியோ பரப்பியதால் இளைஞர் தற்கொலை…!!

மதுரையில் தனக்கு கொரோனா உள்ளதாக பக்கத்து வீட்டினர் வீடியோ பரப்பியதால் மன உளைச்சலுக்கு ஆளான இளைஞர் தற்கொலை செய்துள்ளார். மதுரையை சேர்ந்த முஸ்தபா கேரளாவில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார்.. திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்பாக மதுரை பிபி குளத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று அங்கு தங்கி உள்ளார். சளி இருமல் மற்றும் உடல்சோர்வு இருந்ததால் முஸ்தபாவிற்கு கொரோனா இருக்கலாம் என்று கருதிய அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். […]

Categories
மதுரை மாநில செய்திகள்

மதுரை மாவட்டம் மேலூரில் அனைத்து கடைகளையும் உடனே மூட திடீர் உத்தரவு!

மதுரை மாவட்டம் மேலூரை சுற்றி ஒரு கிலோமீட்டர் பரப்பளவில் அனைத்து கடைகளையும் உடனே மூட உத்தரவிட்டுள்ளனர். டெல்லி மாநாட்டில் சென்று திரும்பிய 9 பேர் வேலூரை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த திடீர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலூரை சுற்றி ஒரு கிலோமீட்டர் பரப்பளவில் அனைத்து கடைகளை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லியில் நடந்த நிஜாமுதீன் தபிலிஹி மாநாட்டில் தமிழகத்தை சேர்ந்த 1,131 பேர் கலந்து கொண்டு சொந்த ஊர் திரும்பியுள்ளனர். அதில் 523 பேர் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மற்றவர்களை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை – பறிக்காமல் செடியிலேயே கருகும் மல்லிகை… விவசாயிகள் வேதனை..!!

ஊரெல்லாம் வாசம் வீசும் மல்லிகை மலர் பெரும்பாலும் அவை விளைவிக்கும் விவசாயிகளின் வாழ்க்கையை மட்டும் மணக்க வைக்கவே இல்லை. இந்த நிலையில் கொரோனாவால் மலர் சந்தைகள் மூடப்பட்டுள்ளதால் மல்லிகை விவசாயிகள் பெருத்த வேதனையில் முடங்கிப் போயுள்ளனர்.  செடியில் வாடி வதங்கி கிடக்கும் இந்த மலர்களை போலவே மதுரை மல்லிகை விவசாயிகள் வேதனையில் வாடி உள்ளனர். மல்லிகைக்கு பெயர்போன மதுரையில்  ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கரில் மல்லிகை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஆறு மாதங்கள் மட்டுமே மல்லிகைக்கு சீசன். இந்த […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மதுரை ராஜாஜி மருத்துவ கல்லூரியில் கொரோனா ஆய்வகம்… அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மருத்துவமனைகளில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்த தேவையான நிதி ஒதுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வருபவர்களை ஆய்வு செய்து தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும் என நேற்று மாலை அறிவித்திருந்தது. இதனிடையே தமிழகத்தில் முதல் பலியாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மதுரையை சேர்ந்தவர் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா […]

Categories
சற்றுமுன் மதுரை மாநில செய்திகள்

வெளியே வந்தால் அபராதம் – மதுரை போலீஸ் அதிரடி நடவடிக்கை …!!

மதுரையில் தேவையின்றி வெளியே வந்துள்ள வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்ட்டுள்ளது. இந்தியாவில் வேகமாக வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 21 நாட்களுக்கு அமல்படுத்தப்படும் முழு ஊரடங்கை மக்கள் பின்பற்றும் படியும் , யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களை வலியுறுத்தினார் இதனைத் தொடர்ந்து மாநிலங்களிலுள்ள மாவட்ட எல்லைகள் மூடப்படுகின்றன. அத்தியாவசிய தேவைகளை தவிர ஏனைய அனைத்து முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்திலும் முழு […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

கொரோனா பாதித்த மதுரை நோயாளி கவலைக்கிடம்… மக்களிடம் அலட்சியம் வேண்டாம் – அமைச்சர் விஜயபாஸ்கர்!

தமிழக சட்டப்பேரவை இன்று கூடிய நிலையில் கொரோனா வைரஸ் நடவடிக்கை குறித்து விளக்கம் அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் கொரோனா மின்னல் வேகத்தில் பரவுகிறது. சமூகத்தொற்றாக மாறி பரவுவதால் அதனை தடுக்க அரசு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார். பயணங்களை தவிர்த்தாலே நோய் பரவுதலின் வேகம் குறையும். தயவு செய்து பயணங்களை தவிருங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர், அரசு சொல்வதை மக்கள் உறுதியாக கேட்க வேண்டும், அரசு உத்தரவின் படி பொதுமக்கள் […]

Categories

Tech |