ராமநாதபுரத்தில் பாஸ்போர்ட் பெறுவதற்கு போலி ஆவணங்களை குடுத்து முயன்ற பெண் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராமநாதபுரம் வெளிப்பட்டிணத்தை அடுத்துள்ள நாகநாதபுரம் பகுதியில் சீனிநாகூர்கனி மற்றும் அவரது குடும்பத்தினர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சீனிநாகூர்கனியின் மகள் ஜமீல்ரியாத் மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் பாஸ்போர்ட் வேண்டும் என விண்ணப்பித்துள்ளார். இதனையடுத்து அந்த விண்ணப்பத்துடன் பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளார். இதனைத்தொடர்ந்து ஜமீல்ரியாத் சமர்ப்பித்த பிறப்பு சான்றிதழ் மீது சந்தேகமடைந்த அதிகாரிகள் அந்த துறை சம்மந்தப்பட்ட […]
