காவலரை கத்தியால் குத்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமான் அருகே அரித்துவாரமங்கலம் பகுதியில் இளைஞர் ஒருவர் மது அருந்திவிட்டு பொது மக்களிடம் ரகளை செய்துள்ளார். இதுகுறித்து அரித்துவாரமங்கலம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி மணிகண்டன் என்ற காவலர் சம்பவ இடத்திற்கு சென்று ரகளை ஈடுபட்ட வாலிபரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் மணிகண்டனை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதைப்பார்த்த அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மணிகண்டனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]
