தேனி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு அருகே அனுமதி பெறாமல் மதுபான பார்கள் நடத்தப்பட்டன. இதுகுறித்து அரசுக்கு பல்வேறு புகார்கள் சென்றன. இதையடுத்து மதுரை டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் அருண் சத்யா தலைமையில் 3 குழுக்கள் அமைத்து டாஸ்மாக் அதிகாரிகள் ஆண்டிப்பட்டி, தேனி, கம்பம் ஆகிய இடங்களில் டாஸ்மாக் கடைகள் அமைந்துள்ள பகுதிகளில் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தேனியில் 2 டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் அனுமதி பெறாமல் மதுபான பார் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த […]
